கொழும்பின் சில பகுதிகளில் கடும் வாகன நெரிசல்!

கொழும்பின் சில பகுதிகளில் தற்போது கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு – கண்டி வீதியின் புதிய களனி பாலத்தின் கொழும்பிற்கு பிரவேசிக்கும் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஹைலெவல் வீதியின் நுகேகொடை, கொஹூவலை, நாவல, ராஜகிரிய,கொள்ளுப்பிட்டி மற்றும் நாடாளுமன்ற சுற்றுவட்ட பகுதிகளிலும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

பாடசாலைகளின் சகல தரங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் வழமைப்போல் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE