ஐரோப்பாவில் அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் ஐந்து லட்சம் பேர் உயிரிழக்கலாம்… உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது

ஐரோப்பாவில் கொரோனா தொற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிட்டால் அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் ஐந்து லட்சம் பேர் உயிரிழக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் குளிர் காலம், போதுமான அளவுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படாதது, ஐரோப்பிய பிராந்தியத்தில் கொரோனாவின் டெல்டா திரிபு பரவுவது என பல்வேறு காரணிகள் இந்த மாபெரும் பரவலுக்குப் பின் உள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பைச் சமாளிக்க கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை அதிகரிப்பது, அடிப்படை பொது சுகாதார நடவடிக்கைகளைச் செயற்படுத்துவது, புதிய மருத்துவ சிகிச்சை முறைகளை செயற்படுத்துவது போன்றவை உதவும்.

மேலும் கட்டாய தடுப்பூசியினை கடைசி வாய்ப்பாக கருத வேண்டும். ஆனால் அது தொடர்பில் சட்ட ரீதியிலும், சமூக ரீதியிலும் விவாதங்கள் நடத்தப்படுவது நன்மையை விளைவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE