ரஷ்யா நாட்டில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

ரஷ்யா நாட்டில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணித்தியாலத்தில் புதிதாக 40,096 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவில் மாஸ்கோவில் மட்டும் 8,440 கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 83,92,697 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 1,159 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE