தடுப்பூசியால் ஆயிரக்கணக்கான கனேடிய மக்கள் எதிர்கொள்ளவிருக்கும் அச்சுறுத்தல்

கொரோனா தடுப்பூசி போட்டுகொள்ளாத ஆயிரக்கணக்கான கனேடிய மக்கள் வேலையை இழக்கும் அச்சுறுத்தல் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனேடிய அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டிய காலக்கெடு அக்டோபர் 29 உடன் முடிவடைகிறது என குறிப்பிட்டுள்ளது. அரசின் உத்தரவை ஏற்காத ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றே தெர்வித்திருந்தது. தற்போது தனியார் நிறுவனங்களும் தங்களுக்கான தடுப்பூசி கொள்கையை வகுத்துள்ளனர். இதனால் கனேடிய மக்கள் பலர் எதிர்வரும் மாதங்களில் வேலையை இழக்கும் இக்கட்டான சூழல் உருவாகும் என தொழிலாளர் சட்டத்தரணி Howard Levitt சுட்டிக்காட்டியுள்ளார். தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் வேலையை விட்டு நீக்கப்படுவார்கள் அல்லது தாமாகவே வேலையில் இருந்து நின்று விடுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சமூக நலன் கருதி தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்தப்படுவதால், வேலையில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர்கள் நீதிமன்றத்தை நாடினாலும் பலன் இருக்கப் போவதில்லை என சட்டத்தரணி Howard Levitt சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவில், அமெரிக்க விமான சேவை நிறுவனம் தங்கள் ஊழியர்களிடம் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளதுடன், மீறுபவர்கள் வேலையை இழக்க நேரிடும் என தெரிவித்துள்ளனர்.மட்டுமின்றி, குடியிருப்பில் இருந்து பணியாற்றும் ஊழியர்களும், தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்தால், அவர்கள் வேலையும் பறிபோகும் என Howard Levitt சுட்டிக்காட்டியுள்ளார். தடுப்பூசியை காரணமாக கூறி, வேலையைவிட்டு நீக்கப்படும் ஊழியர்களுக்கு இழப்பீடு போன்ற எந்த சலுகைகளும் கிடைக்க வாய்ப்பில்லை என்றே அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE