அலி சப்ரி யார் சாணக்கியன் கேள்வி

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் பங்கு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைச்சர் அலி சப்ரி,வெளிவிவகார அமைச்சராக மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துகிறாரா அல்லது தனது வாடிக்கையாளரான கோட்டாபய ராஜபக்சவை பிரதிநிதித்துவப்படுத்துகிறாரா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையில் பொருளாதார குற்றங்கள் இழைக்கப்படவில்லை என அமைச்சர் சப்ரி. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்திருந்தார்.

எனினும் பொருளாதார குற்றங்கள் இழைக்கப்பட்டதற்கு போதிய ஆதாரங்கள் இருக்கின்றன.

அமைச்சர் அலி சப்ரியும் நீதியமைச்சராக இருந்தபோது முன்னெடுத்த 20வது திருத்தம் காரணமாக ஜனாதிபதிக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதுவே நாட்டின் பொருளாதாரத்தை ஜனாதிபதியால் அழிக்க வழிவகுத்ததுடன் பொருளாதாரக் குற்றங்களும் இழைக்கப்பட்டுள்ளன. எனவே இதற்கு அமைச்சர் அலி சப்ரியே பொறுப்புக் கூறவேண்டும்.

இலங்கையின் டொலர் கையிருப்பு முற்றாக அழிந்துவிட்டது. உரத்தடை காரணமாக விவசாயிகள் மில்லியன் கணக்கில் நட்டமடைந்துள்ளனர்.

எரிபொருள் தட்டுப்பாட்டினால் மீன்பிடித் தொழில் அழிந்துள்ளது. அமைச்சர் அலி சப்ரியின் வாடிக்கையாளரான கோட்டாபய ராஜபக்சவே இந்த பொருளாதாரக் குற்றங்களுக்குக் காரணம் என்றும் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE