இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர வீடுகள் – தமிழக முதல்வர்

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக இலங்கை தமிழர்களுக்காக அனைத்து வசதிகளுடனும் கூடிய நிரந்தர வீடுகளைக் கொண்ட மறுவாழ்வு முகாம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி மூலம் திறந்து வைத்துள்ளார்.

இந்த நிரந்தர வீடுகள் திண்டுக்கல்லில் இலங்கை அகதிகள் குடியிருந்த தோட்டனூத்து, அடியனூத்து, கோபால்பட்டியில் உள்ள முகாம்களை ஒருங்கிணைத்து கட்டப்பட்டுள்ளன.

மேலும், உட்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

17.84 கோடி இந்திய ரூபா செலவில் தலா 300 சதுர அடியில் 321 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE