
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு அமைந்துள்ள ஜெனீவா நகரில் இலங்கையர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை 28 ஆம் திகதி ஆர்ப்பாட்டமொன்றி ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜேர்மனி, இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய், அடக்குமுறையை நிறுத்து, அப்பாவி இளைஞர்களை கைது செய்யாதே போன்ற பதாதைகளை தூக்கியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.