பொருளாதார ஒத்துழைப்புக்கான ஆசிய மன்றம் வலியுறுத்து

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள், உதவ வேண்டுமென பொருளாதார ஒத்துழைப்புக்கான ஆசிய மன்றம் வலியுறுத்தியுள்ளது.

22 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கையில், முன்னொருபோதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. ஜூலை மாதத்தில் பணவீக்கம் 60.8 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. மேலும் அந்நிய செலாவணி கையிருப்புக்கு மத்தியில் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகளின் கடுமையான பற்றாக்குறையை நாடு எதிர்கொண்டுள்ளது.

தற்போது இலங்கை மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.அவசர தேவை இருந்த போதிலும் சர்வதேச நாணய நிதியத்துடனான பிணை எடுப்பு ஒப்பந்தம் செய்து கொள்ள பல மாதங்கள் ஆகுமென ஆசிய மன்றம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள், ஆசியாவின் இரண்டாவது மற்றும் நான்காவது பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகளாகும்.இந்த நிலையில் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், விரைவான சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், அதன் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்தவும் உதவுவது கட்டாயம் என்று ஆசிய மன்றம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE