தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸின் பூதவுடல் இலங்கை வந்தது ( படங்கள் இணைப்பு )

கடந்த மாதம் 26ஆம் திகதி மாலைதீவில் உயிரிழந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸ் இன் பூதவுடல் நேற்று இரவு 10 மணியளவில் மன்னார் பனங்கட்டுக் கொட்டில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

டக்சன் பியூஸ்லஸ் இன் பூதவுடல், கடந்த 3ஆம் திகதி அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வந்தடைந்தது.

இந்த நிலையில் பூதவுடல் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு , மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைத்து கையளிக்கப்பட்டது.

இதனையடுத்து மனைவியிடம் ஒப்படைக்கப்பட பூதவுடல் யாழ்ப்பாணத்துக்கு அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்பட்டது. நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் பனங்கட்டுக் கொட்டில் உள்ள அன்னாரது இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டது.

யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் வரும் வழியில் பூநகரி, முழங்காவில் , தேவன்பிட்டி,விடத்தல் தீவு, ஆண்டாங்குளம்,அடம்பன் போன்ற இடங்களைச் சேர்ந்த கால்பந்தாட்ட கழக வீரர்கள், மற்றும் பல ஆயிரக்கணக்கான மக்கள் டக்சன் பியூஸ்லஸின் பூதவுடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE