பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் ‘ஒன்லைன்’ வாயிலான சந்திப்புகள் ரத்து

கொரோனா பாதிப்பு காரணமாக பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் (95 வயது) நேற்றைய ‘ஒன்லைன்’ வாயிலான சந்திப்புகளை ரத்து செய்துள்ளார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது.

இரு ‘டோஸ்’ தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் ஆகியன செலுத்தி இருப்பதால் வைரஸ் பாதிப்பிற்கு பிறகும் ராணி எலிசபெத் ‘ஒன்லைன்’ வாயிலாக குறிப்பிட்ட பணிகளை மேற்கொண்டார்.

லேசான குளிர் உள்ளிட்ட உடல் பாதிப்புகளால் நேற்று திட்டமிடப்பட்டு இருந்த ஒன்லைன் சந்திப்புகளை அவர் ரத்து செய்ததாக அரண்மனை வட்டாரங்கள் கூறி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE