உலக தாய்மொழி தினத்தில் சீன மாணவிகள் வாழ்த்து..!!

உலக தாய்மொழி தினமான இன்று சீனாவில் உள்ள யுனான் பல்கலைக்கழக மாணவிகள் தமிழ் மொழிக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படம் வெளியிட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் எங்கும் தமிழ் மனம் கமழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், செஞ்சீனத்தில் தமிழ் பரப்பும் முனைப்போடு கடந்த 2019ம் ஆண்டு சீனாவை சேர்ந்த தமிழ் பேராசிரியை நிறைமதி என்ற கிகி ஜாங், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆசிரியர் பயிற்றி பெற்று அங்கு தமிழ் ஆர்வம் கொண்ட மாணவ, மாணவியருக்கு தமிழ் மொழியை கற்றுக்கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் தமிழ் பயிலும் மாணவிகள் சிலர், உலக தாய்மொழி தினமான இன்று தமிழ் மொழியை வாழ்த்தும் விதமாக கற்க கசடற, செம்மொழி குறிஞ்சி, மெய் பொருள் காண்பது அறிவு என தமிழ் மொழியில் வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தியபடி தமிழ் மொழிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

சர்வதேச தாய்மொழி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் தங்கள் தாய்மொழியின் சிறப்புகளை கொண்டாடி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE