![நியூசிலாந்தில் ஏற்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் ..!](https://i0.wp.com/norwayradiotamil.com/wp-content/uploads/2021/12/istockphoto-951984490-612x612-1.jpg?fit=612%2C378&ssl=1)
நியூசிலாந்து நாட்டில் வரும் 2027-ம் ஆண்டு முதல், சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கப்பட உள்ளது.
50 லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்தில், சிறுவர்கள் அதிகளவில் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், அந்நாட்டு சுகாதாரத்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2027-ல் 14 வயதை எட்டும் அனைவருக்கும், நிரந்தரமாக சிகரெட் விற்க தடை விதிக்கப்பட உள்ளது. இதன், மூலம் ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்க முடியும், என அந்நாட்டு சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆயிஷா வெரால் கருத்து தெரிவித்தார்.