100 சதவிகித இருக்கைக்கு அனுமதி

கொரோனா தொற்றால் இந்தியாவிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் கேரளா. அதனால் அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் அதிகமாக இருந்தது. இதை தொடர்நது அங்குள்ள தியேட்டர்கள் மூடப்பட்டது. 3வது அலையின் போது தொற்று பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. மற்ற பகுதிகளில் உள்ள சினிமா தியேட்டர்களில் 50 சதவீதம் இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் குறைந்து வருகிறது. அதைத் தொடர்ந்து படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று ( மார்ச் 1)முதல் சினிமா தியேட்டர்களில் 100 சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மலையாள திரையுலம் மகிழ்ச்சி அடைந்துள்ளது. சினிமா அமைப்புகள் மாநில அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE