![விஷால் படம் தள்ளி வைப்பு](https://i0.wp.com/norwayradiotamil.com/wp-content/uploads/2022/01/5-bg-1.jpg?fit=318%2C185&ssl=1)
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் நடித்த வீரமே வாகை சூடும் படத்தை ஜனவரி 26-ம் தேதி வெளியிட இருந்த விஷால் தற்போது அந்த படத்தின் ரிலீஸ் தேதியை பிப்ரவரி 4ம் தேதிக்கு மாற்றி இருக்கிறார். இது குறித்த போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார் விஷால். அதனால் சூர்யா – விஷால் படங்கள் மோதும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், அஜித்தின் வலிமை ரிலீஸ் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் , சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ரிலீசும் தள்ளி வைக்கப்பட்ட இருப்பதாக இன்னொரு செய்தியும் வெளியாகி உள்ளது. அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.