திலினிக்கு விசேட சலுகை வழங்கினாரா விஜயதாஸ?

பண மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலிக்கு, நீதி மற்றும் சிறைச்சாலை அமைச்சர் என்ற ரீதியில் விஷேட சலுகை வழங்கியதாக தம்மீது சுமத்தப்பட்டுள்ள பொய்யான முகநூல் பதிவு தொடர்பில் விசாரணை நடத்துமாறு, நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரிடம் வலியுறுத்தியுள்ளார்.

வழக்கு தொடர்பாக இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக பொய்யான மற்றும் தீங்கிழைக்கும் பதிவுகளை பரப்பியமை முழு சட்ட அமைப்புக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று நீதி அமைச்சர் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான தகவல்களைப் பரப்புவது இலங்கையின் நீதித்துறை மற்றும் குற்றவியல் நீதிச் செயன்முறையின் ஒருமைப்பாட்டையும் பாதிக்கும் அவர் தெரிவித்தார்.

பதவியின் நகல் மற்றும் பொய்யான குற்றச்சாட்டை பதிவிட்டவரின் விபரங்களை இணைத்துள்ள நீதி அமைச்சர், விசாரணை நடத்தி, மேல் நடவடிக்கைக்காக கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE