முதல் முறையாக இருபதுக்கு இருபது உலக கிண்ணத்தினை வென்ற அவுஸ்ரேலியா!

இருபதுக்கு இருபது உலக கிண்ணத்தினை அவுஸ்ரேலிய அணி முதன்முறையாக முத்தமிட்டுள்ளது.

ஏழாவது இருபதுக்கு இருபது உலக கிண்ணத் தொடரின் இறுதி போட்டி தடுபாயில் இன்று நடைபெற்றது.

இதில் நியூசிலாந்து – அவுஸ்ரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அதிரடியாக விளையாடிய அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 48 பந்துகளில் 85 ஓட்டங்கள குவித்தார்.

இதையடுத்து 173 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்ரேலிய அணியின் ஆரம்ப வீரராக களமிறங்கிய ஆரோன் பிஞ்ச் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

அதேசமயம் மற்றொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான வோர்னர் அதிரடியாக ஆடி ஓட்டங்களை குவித்தார். அவர் 38 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 53 ஓட்டங்களை குவித்து நல்ல அடித்தளம் அமைத்தார்.

இதேபோல் நியூசிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்த மிட்செல் மார்ஷ், விரைவாக அரை சதம் கடந்ததுடன், அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். மறுமுனையில் மேக்ஸ்வெல்லும் பொறுப்புடன் விளையாடினார்.

இதனால், அவுஸ்ரேலிய அணி 7 பந்துகள் மீதமிருந்த நிலையில், 173 ஓட்டங்களை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மார்ஷ் 50 பந்துகளில் 77 ஓட்டங்களுடனும், மேக்ஸ்வெல் 18 பந்துகளில் 28 ஓட்டங்களுடனும், களத்தில் இருந்தனர்.

இதன்மூலம், இருபதுக்கு இருபது உலக கிண்ணத்தினை அவுஸ்ரேலிய அணி முதன்முறையாக முத்தமிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE