
சப்ரகமுவ மாகாண ஆளுநரால், மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் நோயல் தசந்த ஸ்டீபனை அந்தப் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கி வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் பதவிக்கு உப தலைவரான கோரலே கெரத பியதிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளார்.
சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகடுவ 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க உள்ளுராட்சி சபை சட்டத்தின் 185(3) (அ) (i) பிரிவின்படி ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய மேற்படி வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.