தமிழர் உரிமையை பெறுவது குறித்து சாணக்கியன் கருத்து

இந்நாட்டில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை தொடர்ந்தும் மறுக்கப்படுமாயின் சர்வதேச சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மேலும் கூறியதாவது:

“.. ஆங்கிலேயர்கள் தமிழ் மக்களின் தலைவிதியை சிங்கள மக்களிடம் ஒப்படைத்த நாள் முதல் இன்று வரை தமிழ் மக்கள் பல இன்னல்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. எங்களின் உரிமைகளை வென்றெடுப்பது பற்றி பேசுவதை விட்டுவிட்டு அவற்றை வென்றெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரப்பட்ட போது அறிவார்ந்த தமிழ் இளைஞர்கள், படித்தவர்கள் பலர் இந்த நாட்டை விட்டு வெளியேறினர். அது தான் உண்மை. தற்போது தெற்கில் உள்ள பல படித்த, புத்திசாலிகள் இந்த நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். அதற்காக இன்று இந்நாட்டு மக்கள் குரல் எழுப்புகின்றனர்.

இன்று இந்நாட்டு மக்கள் பொருளாதார சுதந்திரத்தை இழந்துள்ளனர். ஆனால் தமிழ் மக்களின் பொருளாதார மற்றும் அரசியல் சுதந்திரம் இழக்கப்பட்டுள்ளது. அவை நிராகரிக்கப்படுகின்றன. பெருந்தோட்ட தமிழ் மக்கள் இந்நாட்டின் பொருளாதாரத்திற்காக பெரும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற ஒரு குழுவாகும். அவர்களின் குடியுரிமை உரிமைகள் கூட பறிக்கப்பட்ட ஒரு காலம் இருந்தது. ஆனாலும் அந்த மக்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் சேவை செய்து வருகின்றனர்.

வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கு சொந்தமான பல காணிகள் பலவந்தமாக கையகப்படுத்தப்பட்டு அந்த காணிகள் சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன..”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE