தன் பணத்தையே கொள்ளையடித்த : லெபனான் பெண்

லெபனான் நாட்டில் பெண் ஒருவர் பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டி வங்கியில் தன் பணத்தையே கொள்ளையடித்த விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் லெபனான் நாட்டில் வங்கிகளில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனால் மக்கள் அவசரகாலத்திற்கு பணம் எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். ஷலி ஹபீஸ் என்ற பெண் தன்னுடைய சகோதரியின் புற்றுநோய் சிகிச்சைக்காக வெய்ரூட் புளோம் வங்கியில் இந்திய மதிப்பில் 10 லட்சம் ரூபாய் வரை சேமித்து வைத்திருந்தார். சகோதரியின் சிகிச்சையை முன்னிட்டு வங்கியில் தான் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுக்க முயன்றிருக்கிறார்.

ஆனால் மாதத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் மட்டும் எடுக்க முடியும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்ததால் தன்னுடைய சகோதரிக்கு சிகிச்சை மேற்கொள்ள சிரமம் ஏற்படும் என்பதை உணர்ந்து அவர் விநோதமான செயலில் ஈடுபட்டுள்ளார்.

வங்கியால் பாதிக்கப்பட்ட தன்னார்வலர்களுடன் இணைந்து பொம்மை துப்பாக்கியை காட்டி வங்கியில் உள்ள தன்னுடைய சேமிப்பு தொகையை கொள்ளையடித்துவிட்டார். பாதுகாப்பு படையினர் வருவதற்குள் பின்பக்க ஜன்னலை உடைத்துக்கொண்டு ஹபீஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் தப்பி சென்றனர்.

இதனை சமூக வலைத்தளங்களில் நேரடியாகவும் ஹபீஸ் ஒளிபரப்பு செய்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE