நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் – கட்டாயமாகும் முகக்கவசம்

நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் காரணமாக முகக்கவசம் அணிவதை காட்டாயமாக்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (25) சுகாதார அமைச்சில் நடைபெறவுள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் தொற்றாநோய் நிபுணர்களின் பங்குபற்றலுடன் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

புதிய கொவிட் ஒமிக்ரோன் வைரஸ் காரணமாக, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் சுகாதார வல்லுநர்கள் சங்கம் ஆகியவை முகக்கவசங்களை மீண்டும் கட்டாயமாக்குமாறு சுகாதார அமைச்சிடம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE