
எரிபொருள் வரிசையில் காத்திருந்த மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மரணங்கள் கிண்ணியா மற்றும் மத்துகம ஆகிய பிரதேசங்களில் பதிவாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கிண்ணியாவில் 59 வயதுடைய நபர் ஒருவரும் மற்றும் மத்துகம பெல்வத்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த 64 வயதுடைய முதியவர் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.