அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் – இலங்கை ஜனாதிபதி சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ள அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலண்ட் உள்ளிட்ட அமெரிக்க தூதுக்குழுவினர், இன்று ஜனாதிபதி உள்ளிட்ட அரசின் உயர்மட்ட அதிகாரிகள் , வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரையும் சந்திக்கவுள்ளனர்.

இன்று வெளிவிவகார அமைச்சில் நடைபெறவுள்ள இலங்கை – அமெரிக்க கூட்டு பேச்சுவார்த்தையின் நான்காவது அமர்வுக்கு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பிரதி செயலாளர் நுலாண்ட் ஆகியோர் தலைமை தாங்கவுள்ளனர்.

இதனிடையே, கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம் செய்து வர்த்தக சமூகத்தினர் மற்றும் சிவில் சமூகத்தினரை சந்திப்பார் விக்டோரியா நுலாண்ட் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE