இந்திய பிரதமர் – இலங்கை நிதியமைச்சர் இடையில் இன்று சந்திப்பு

இந்தியாவுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார்.

அத்துடன், வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரையும் நிதி அமைச்சர் இன்று சந்திக்க உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நேற்றுப் பிற்பகல் இந்தியாவுக்கு பயணமானார். அவரின் இந்த 2 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில், திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவும் இணைந்துள்ளார்.

ஒரு பில்லியன் டொலர் கடன் வசதி உடன்படிக்கையில் கையொப்பமிடுவதற்காக நிதி அமைச்சர் இந்தியாவுக்கு பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கடன் வசதியானது, அரிசி, கோதுமை, சீனி மற்றும் மருந்துகள் உட்பட அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கானதாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE