விமல் வீரவன்சவின் மனைவிக்கு இன்று தீர்ப்பு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச தொடர்பான கடவுச்சீட்டு வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு தவறான தகவல்களை சமர்ப்பித்து போலி இராஜதந்திர கடவுச்சீட்டை தயாரித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட அவருக்கு எதிரான இரண்டு வழக்குகள் அண்மையில் தொடரப்பட்டன.

அதன்படி, கொழும்பு பிரதான நீதவான் புத்திக சி.ராகலா பெப்ரவரி 10ஆம் திகதி முன்னிலையாகுமாறு அழைப்பு விடுத்தார்.

திருமதி ஷஷி வீரவன்ச 1967 ஆம் ஆண்டு பிறந்ததாகவும் ஆனால் அவரது பிறப்புச்சான்றிதழில் 1971 என பிறந்த திகதியை மாற்றியதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தனர்.

அதற்கமைய திருமதி ஷஷி வீரவன்ச ,குறித்த இரண்டு பிறந்த நாட்களிலும் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE