வாழைச்சேனை ஊடகவியலாளர் பிணையில் விடுவிப்பு

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கிண்ணையடி வாழைச்சேனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் மு.கோகிலதாசன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மாவட்ட நீதவான் நீதிமன்றம் வாழைச்சேனையில் நீதிபதி எச்.எம்.எம்.பசில் முன்னிலையில் இவரது வழக்கு இன்று காலை எடுத்துக்கொள்ளப்பட்டபோது நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல நீதி மன்றம் அனுமதி வழங்கியது.

அவர் தனது சொந்த பெயர் பொறித்த முகப் புத்தகத்தில் அரசினால் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் (கார்த்திகை-27) அடங்கிய புகைப்படங்களை பதிவிட்டார் என்பதன் அடிப்படையில் 28.11.2020 ஆம் திகதி வாழைச்சேனை பொலிசாரினால் கைது செய்யப்பட்டு மாவட்ட நீதவான் நீதிமன்றம் வாழைச்சேனையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE