பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிரான கையெழுத்து வேட்டை!

பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக பொதுமக்களிடம் கையெழுத்து சேகரிக்கும் செயற்திட்டமானது இன்று சனிக்கிழமை மன்னாரிலும் திருகோணமலையிலும் இடம்பெறவுள்ளன.

மன்னாரில் பிரதான பேருந்து நிலையத்தில் காலை 9.00 மணிக்கும், மாலை 3.30 மணியளவில் திருகோணமலை சிவன் ஆலயத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் சிலையருகிலும் இந்த நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை முற்றாக நீக்குமாறு ஐ.நா உள்ளிட்ட பல சர்வதேச நாடுகளும் வலியுறுத்தி வருகின்ற நிலையில் இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் திருத்தங்கள் செய்வதாகக் கூறி வருகின்றது ,இந்த நிலையில் சர்வதேசமே தலையிட்டு இச்சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் பொதுமக்களிடம் இந்தக் கையெழுத்து சேகரிக்கும் செயற்திட்டம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE