மிகவும் கடினமான காலகட்டத்தில் இந்தியா- சீனா உறவு: மத்திய அமைச்சர்

சீனாவுடனான, நமது உறவு இப்போது மிகவும் கடினமான கட்டத்தை எட்டியுள்ளதாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற அவர் பேசியதாவது: சீனாவுடன் இந்தியாவிற்கு பிரச்னை உள்ளது. 45 ஆண்டுகளாக அமைதி நிலவியது. நிலையான எல்லை நிர்வாகம் இருந்தது. 1975 முதல் எல்லையில் ராணுவ உயிரிழப்புகள் இல்லை. ராணுவ படைகளை கொண்டு வரக்கூடாது என்று நாங்கள் சீனாவுடன் ஒப்பந்தம் செய்தால், அது மாறியது. நாங்கள் அதை எல்லைக்கோடு என அழைக்கிறேம். ஆனால், அது நிலையான கட்டுப்பாட்டு கோடு.

மேலும் சீனா அந்த ஒப்பந்தங்களை மீறியது. எல்லையில் நிலைமையை பொறுத்தே அவர்களுடன் எம்மாதிரியான உறவு இருக்கும் என்பது தீர்மானிக்கப்படும். இது இயற்கையான நியதி. எனவே தற்போது சீனாவுடனான உறவுகள் மிகவும் கடினமான கட்டத்தில் சென்று கொண்டிருக்கின்றன. இவ்வாறு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE