ராகம மருத்துவ பீடத்தின் மாணவர்கள் மீது தாக்குதல் – நால்வர் காயம்

ராகம பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் மாணவர்கள் மீது இன்று (புதன்கிழமை) அதிகாலை வெளி குழுவினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மூன்று மாணவர்கள் ராகம வைத்தியசாலையிலும் மற்றுமொருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் ராகம பல்கலைக்கழகத்தின் ஆண்கள் விடுதியில் தங்கியிருந்த 4ஆம் வருட மாணவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு வாகனங்களில் வந்த 15 பேர் கொண்ட குழு இந்த தாக்குதலை நடத்தியதாக மாணவர்கள் தெரிவித்ததுள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரு வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE