நீரில்மூழ்கி இறந்த பெண்ணின் சடலம் இனங்காணப்பட்டது

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டு கல்லடிப்பாலத்தின் கீழ் நீரில் மூழ்கிய நிலையில் கடந்த 22 ஆம் திகதி மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெரியஊறணி மட்டக்களப்பை சேர்ந்த குறித்த பெண் செல்வரெத்தினம் றேணுகாதேவி (59) வயதுடைவர் என்றும் இவர் கடந்த 20ம் திகதி தனது வீட்டிலிருந்து முச்சக்கரவண்டி ஒன்றில் மட்டக்களப்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை பின்னர் கடந்த 22 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கிளிநொச்சியில் வசித்து வரும் பெண்ணின் மகள் தனது தாயார் என சடலத்தை அடையாளம் காட்டியுள்ளார்.

மரணமானவர் தான் கைபட எழுதிய கடிதத்தில் தனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை தான் நோய் வாய்பட்டிருப்பதனால் இந்த முடிவினை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE