பராகுவேயில் பலத்த மழை – 6 பேர் பலி

தெற்கு அமெரிக்க நாடான பராகுவேவில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

பராகுவேயில் கடந்த செவ்வாயன்று பெய்ய தொடங்கிய பலத்த மழை இடைவிடாமல் 24 மணி நேரம் கொட்டியது.

இதனால் முக்கிய சாலைகள் அனைத்திலும் ஆறுகள் போல வெள்ளம் பாய்ந்து ஓடியது. குறிப்பாக தலைநகர் அசன்சியானை வெள்ளம் சூழ்ந்தது. நெடுஞ்சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் சான் லோரென்ஸோ நகரமே தனி தீவாக மாறிவிட்டது. மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக பராகுவே மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது மழை சற்று குறைந்துள்ளதால் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE