இந்தியாவுடன் இலங்கையை இணைத்துவிட்டு ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் போகலாம் – கிளிநொச்சி விவசாயி

ஆளும் கட்சியாலும் நாட்டை பாதுகாக்க முடியாமல் இருக்கின்றது. எதிர் கட்சியினாலும் நாட்டை நடாத்த முடியது போல் உள்ளது. அவ்வளவு கடன் பிரச்சினை. இந்தியாவுடன் நாட்டை இணைத்துவிட்டு இருவரும் வெளியேறினால் நல்லது என கிளிநொச்சி விவசாயி ஒருவர் தனது ஆதங்க கருத்தினை வெளியிட்டுள்ளார்

எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த சமயம் மேற்படி விவசாயி தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார். தமக்கு காலபோக செய்கையில் பாரிய நட்டம் ஏற்பட்டதாகவும், சிறுபோகத்தில் ஈடு செய்யலாம் என எண்ணிய போது தற்பொழுது எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாது இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். பசளை தட்டுப்பாடும், எரிபொருள் தட்டுப்பாடும் தமக்கு பெரும் சவாலாக காணப்படுவதால், எதிர்காலத்தில் விவசாயத்தை முழுமையாக கைவிட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE