இலங்கையில் இன்று பல இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது

இலங்கையின் வானிலையில் இன்று, வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரையில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எதிா்வுகூறியுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும்.

பல இடங்களில் குறிப்பாக பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழையை எதிர்பார்க்கலாம் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE