மோசமடைந்தது இலங்கையின் நிலை! மீண்டும் கட்டுப்பாடு?

கடந்த 10 – 15 நாட்களாக மக்கள் கவனக்குறைவாக நடந்து கொண்டதன் விளைவாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் (Dr. Hemantha Herath) தெரிவித்தார்.

தற்போது காணப்படும் கொரோனாவின் பாதிப்புகளையும் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் பாதிப்புகளையும், ஓரிரு நாட்களில் சரி செய்ய முடியாது என்றும் குறிப்பிட்டார். சுகாதார சேவைகள் மேம்பாட்டு பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

எதிர்காலத்தில் பாதிப்புகளின் அதிகரிப்பதை தடுக்க, கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகள் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறினார். எனவே, வெளியில் செல்லும்போது சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE