நாட்டில் இன்று இதுவரையில் 715 பேருக்கு கோவிட் தொற்று உறுதி

நாட்டில் மீண்டும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் இன்று மேலும் 188 பேர் கோவிட் தொற்றாளார்களாக இனம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் இன்று இதுவரையில் 715 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை 548,061 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கோவிட் தொற்றில் இருந்து மேலும் 272 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை கோவிட் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 522,789 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE