பிரிட்டன் எம்.பி.களுக்கு பலத்த பாதுகாப்பு

பிரிட்டனில் நிலவி வரும் பதற்றமான சூழல் காரணமாக தற்போது அந்நாட்டு எம்.பி. களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் அமெஸ் கத்தியால் குதி படுகொலை செய்யப்பட்டார். இதன் எதிரொலியாக எம்.பி.க்கள் அனைவருக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்று உள்துறை அமைச்சா் பிரீத்தி படேல் தெரிவித்துள்ளாா்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று டேவிட் அமெஸ் லீக் ஆன் சீ நகரில் மக்களை நேரில் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது சோமாலியாவை பூர்விகமாக கொண்ட இளைஞன் ஒருவன் கத்தியால் குத்தி அவரை கொலை செய்தான். இந்த நிகழ்வு பொலிஸார் மத பயங்கர வாத செயல் என அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE