பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த இலங்கை தமிழ்ப்பெண்! அவர் கமல்ஹாசனுக்கு கொடுத்த ஒரு பரிசு… என்ன தெரியுமா?

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த இலங்கை தமிழ்ப்பெண் மதுமிதா கமல்ஹாசனுக்கு ஆச்சரிய பரிசு ஒன்றை அளித்துள்ளார்.

மதுமிதா பிக்பாஸ் வீட்டின் மூன்றாவது போட்டியாளராக உள்ளே நுழைந்துள்ளார்.

கடந்த மூன்றாவது சீசனில் தர்ஷன் மற்றும் லாஸ்லியா ஆகியோர் இலங்கை தமிழ் போட்டியாளர்களாக பங்கேற்றனர்.

இந்நிலையில் இம்முறை மதுமிதா ஜெர்மனியில் இருந்து பங்கேற்றுள்ளார்.

வீட்டிற்குள் நுழைவதற்கு முன்னர் மேடையில் பேசிய அவர், பிக் பிரதர் நிகழ்ச்சியை விட பிக் பாஸ் நிகழ்ச்சியினால் ஈர்க்கப்பட்டதால், இந்நிகழ்ச்சிக்கு தான் வர வேண்டும் என ஆசைப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
|

ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், தற்போது ஆடை வடிவமைப்பாளராகவும் மாறியிருக்கிறார்.

மாடலிங்கில் மிகுந்த ஆர்வமுடைய மதுமிதா, தமிழ் பொழுதுப்போக்கு துறையிலும் தற்போது கால் பதித்திருப்பதாகக் கூறினார்.

அதோடு ஒரு ஹேண்ட் மேட் ஆடையை தொகுப்பாளர் கமல்ஹாசனுக்கு பரிசாக வழங்கினார் மதுமிதா. அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட கமல், ஒருநாள் நிகழ்ச்சிக்கு அணிந்து கொள்வதாக உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE