தேனை தெரிந்து கூட இதனுடன் சேர்த்து சாப்பிட்டு விடாதீர்கள்! உயிருக்கே உலை வைத்துவிடும்

நாளுக்கு நாள் மாறி வரும் உணவு பழக்கங்கள் காரணமாக பலருக்கு உடல் எடை சீக்கிரமாக அதிகரித்துவிடுகிறது. எப்படியாவது உடல் எடையை குறைக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் சிலர் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெது வெதுப்பான நீருடன் தேனை சேர்த்து குடிப்பதுண்டு. இது கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பை உறிஞ்சவும் எடை அதிகரிப்பதைத் தடுக்கவும் உதவும் என்று கூறப்படுகிறது.

இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், தாதுக்கள் போன்ற பல ஆரோக்கிய சத்துக்கள் நிரம்பியுள்ளது. இருப்பினும் ஆயுர்வேத முறையில் தேனை எந்த சூடான வடிவத்திலும் பயன்படுத்த அறிவுறுத்தபடவில்லை.

 

  • தேன் சாப்பிடுவதால் இருமலை போக்கும். குடலை சுத்தப்படுத்துகிறது, காயங்கள் மற்றும் தீக்காயங்களுக்கு சிகிச்சையளிக்கிறது மற்றும் சருமத்திற்கு நல்லதாகும். பதப்படுத்தப்பட்ட சர்க்கரையால் நீரிழிவு நோயாளிகளுக்கு பாதுகாப்பாகவும் கருதப்படுகிறது. இது தவிர கால்சியம், இரும்பு, பொட்டாசியம் ஆகியவை நிரம்பியுள்ளன.
  • தேனை நேரடியாக சூடான பால், வெதுவெதுப்பான நீர், சூடான எலுமிச்சை நீர் அல்லது தேநீருடன் கலக்கக்கூடாது என்றும் இது பல நோய்களுக்கு வழிவகுக்கும் என்றும் ஆயுர்வேத நிபுணர்கள் கூறியுள்ளனர்.
    சூடான தேன் உடலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் மெதுவான விஷமாக மாறும். அதே சமயம் கடைகளில் கிடைக்கும் தேனில் சோள சிரப் அல்லது நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும் பிற செயற்கை இனிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.
  • பல்பொருள் அங்காடிகளில் கிடைக்கும் அனைத்து தேன்களும் அதீத வெப்பநிலையில் சூடுபடுத்தப்பட்டு தொகுக்கப்படுகின்றன. இதனால் கடைகளில் தேனை வாங்குவதை தவிர்க்க வேண்டும். தேனீக்களிடமிருந்து நேரடியாக இயற்கை தேனை விற்கும் நபர்களிடமிருந்து தேனை வாங்கி பயன்படுத்துவது நல்லது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE