இரண்டு ஆண்டுகளில் கொரோனா ஊரடங்கு அறிவித்த நாடு

இரண்டு ஆண்டுகளில் முதல்முறையாக கிரிபாடி என்ற நாடு கொரோனா ஊரடங்கு அறிவித்துள்ளது.

உலகில் பல நாடுகளும் கடந்த இரண்டு வருடங்களாக ஊரடங்கு மற்றும் கொரோனா கட்டுபாடுகளை அறிவித்து வருகின்றன. ஆனால் கிரிபாடி என்கிற சிறிய நாடு, முதல் முதலாக கொரோனா ஊரடங்கை நேற்று அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவிலிருந்து சுமார் 4,800 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த சிறிய தீவு தேசத்தில் 1.2 லட்சம் பேர் வாழ்கிறார்கள். கடந்த வாரம் வரை இந்த தேசத்தில் இருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது.

கடந்த செவ்வாய்கிழமை, ஃபிஜி நாட்டிலிருந்து புறப்பட்ட விமானத்தில் பயணித்த 54 பேரில் 36 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயணித்த அனைவரும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிபாடி மக்கள் அத்தியாவசியத் தேவைகள் தவிர வேறு காரணங்களுக்கு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE