என் சகோதரியை கொலை செய்து விட்டனர்: நடிகையின் சகோதரர் புகார்

பா.ஜ.,வைச் சேர்ந்த நடிகை சோனாலி போகத் கொலை செய்யப்பட்டதாக அவரது சகோதரர் போலீசில் புகார் செய்துள்ளார்.

ஹரியானாவைச் சேர்ந்த சோனாலி போகத், 42, ஹிந்தி சினிமா மற்றும் ‘டிவி’ நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலம் ஆனவர். சமூக வலைதளத்திலும் அவரை ஏராளமானோர் பின்தொடர்ந்தனர். கடந்த 2019ல் பா.ஜ.,வில் சேர்ந்த இவர், அப்போது நடந்த ஹரியானா சட்டசபை தேர்தலில் ஆதம்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.சமீபத்தில் கோவா மாநிலம் பணஜிக்கு வந்த சோனாலி, ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார்.

நேற்று முன் தினம் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவரது உதவியாளர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், சோனாலி மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக கூறினர்.

 

இந்நிலையில், சோனாலியின் சகோதரர் ரிங்கு தாக்கா, ‘என் சகோதரி சோனாலியை, உடனிருந்த இருவர் கொலை செய்து விட்டனர். ‘அவரது மரணத்துக்குப் பின் சோனாலியில் பண்ணை வீட்டில் இருந்த லேப்டாப், கண்காணிப்பு கேமரா மற்றும் முக்கிய ஆவணங்கள் மாயமாகியுள்ளன’ என கோவா போலீசில் புகார் செய்துள்ளார்.

இதுகுறித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE