இளைஞர் பிரதிநிதித்துவ விவாதம் கோரி சபாநாயகருக்கு கடிதம்

பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகளில் இளைஞர் பிரதிநிதித்துவத்துக்கான இரண்டாவது விவாதத்திற்கான தனிப்பட்ட உறுப்பினர் பிரேரணையை எடுத்துச் செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்குஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற மற்றும் மாகாண சபை தேர்தல் சட்டங்களை திருத்துவதற்கான பரிந்துரைகளை அமைச்சு வழங்காததாலும், அவற்றுக்கான கால அவகாசம் அன்றைய தினம் முடிவடையவுள்ளதாலும், ஜனவரி 14 ஆம் திகதிக்கு பின்னரான ஒரு நாளில் உரிய விவாதத்தை நடத்துமாறு இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் கேட்டுக்கொள்கிறார்.

பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் 25% இளைஞர் பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கான தனியார் உறுப்பினர்களின் முன்மொழிவுகளில் இருந்து உள்ளூராட்சி பிரதிநிதித்துவத்திற்கான அமைச்சின் பரிந்துரை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் குறிப்பிடுகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE