பல்கலைக்கழக கலைப் பீடத்தின் விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேராதனைப் பல்கலைக்கழக கலைப் பீடத்தின் அனைத்து விரிவுரையாளர்களும் இம்மாதம் 14ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை பணியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளனர்.

எவ்வாறாயினும் பல்கலைக்கழக மாணவர்களின் பரீட்சைகள் வழமை போன்று நடைபெறும் எனவும் அதற்கு தேவையான ஆதரவை வழங்குவதாகவும் விரிவுரையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE