இலங்கையில் பாலின அடிப்படையிலான வன்முறை

இலங்கையில் பாலின அடிப்படையிலான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக ஐநா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் அயர்லாந்து சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த வன்முறை காரணமாக பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவது குறித்து அயர்லாந்து கவலையை வெளிட்டுள்ளது.

மேலும் பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்றியமைப்போம் என்ற இலங்கை அரசாங்கத்தின் வாக்குறுதியை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளது.

அத்தோடு சர்வதேச சட்டத்திற்கு முழுமையாக இணங்கும் வரை பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என அயர்லாந்து வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE