அடுத்த வாரம் தினமும் 10 மணி நேர மின்வெட்டு அமுல்

தற்போது ஆறரை மணித்தியாலங்களுக்கு இருக்கும் மின்தடை அடுத்த வாரத்தில் 10 மணித்தியாலங்களாக அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மின்னுற்பத்தி நிலையங்களுக்கு அவசியமான எரிபொருள் மற்றும் நீர் இன்மையால், மின் உற்பத்தி குறைந்த மட்டத்தில் உள்ளமையே இதற்கு காரணமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, தேசிய மின் கட்டமைப்புக்கு 270 மெகாவொட் மின்சாரத்தை வழங்கும் கெரவலப்பிட்டி மின்னுற்பத்தி நிலையத்தின் பணிகள், உலை எண்ணெய் இன்மையால் நேற்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE