ஜனாதிபதிக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு நாளை!

ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு நாளை (25) இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பில், செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான தமிழீழ விடுதலை கழகம் தவிர்ந்த ஏனைய பங்காளிக் கட்சிகள் யாவும் கலந்துகொள்ளவுள்ளதாக்க தெரிவிக்கப்படுகிறது .

நீண்ட நாட்களாக இந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த வேளை நாளை நிச்சயம் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது . இதன்போது தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு குறித்தே அதிக அவதானம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE