உக்ரைன் ஜனாதிபதியை கொலைசெய்ய சதி

உக்ரைன் ஜனாதிபதியை கொல்ல நடந்த 3 முயற்சிகளை அந்நாட்டு அதிகாரிகள் முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக வெளியான தகவல்: ஜெலன்ஸ்கியை கொல்ல வக்னர் குழு மற்றும் சிசின் போராளிகள் குழுவினர் உக்ரைனுக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, ரஷ்யாவின் பெடரல் பாதுகாப்பு சேவை பிரிவினர், உக்ரைன் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உக்ரைன் மீதான தாக்குதலை விரும்பாத அதிகாரிகளே, இந்த தகவலை தெரிவித்துள்ளனர். உஷாரடைந்த உக்ரைன் அதிகாரிகள், கீவ் நகரின் புறநகரில் கடந்த சனிக்கிழமை, சிசின் குழுவை சேர்ந்தவர்களை சுட்டு கொன்றனர். வக்னர் குழுவினரின் நடமாட்டத்தை கண்காணித்தும், அவர்களின் முயற்சிகளையும் பாதுகாப்பு படையினர் முறியடித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE