ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது!

கெரவலப்பிட்டி பகுதியில் பூகுடு கண்ணா எனப்படும் பாலச்சந்திரன் புஷ்பராஜின் உதவியாளர் ஒருவர் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து ஒரு கோடி ரூபாவுக்கு அதிக பெறுமதியான ஹெரோயினும், போதைப்பொருள் வர்த்தக்கத்தில் ஈட்டியதாக கருதப்படும் 793,350 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான பூகுடு கண்ணாவின் அறிவுறுத்தலின் பேரில் இவர் போதைப்பொருள் கடத்தலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்  பூகுடு கண்ணா தெரிவித்த இடத்திற்குச் சென்று அங்குள்ள பெண் ஒருவரிடமிருந்து போதைப்பொருளை பெற்றுக் கொண்டுள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் போதைப்பொருளை பல்வேறு நபர்களுக்கு வழங்கியுள்ளதாகவும், அதன் மூலம் பெற்றுக் கொண்ட பணத்தை குறித்த பெண்ணிடம் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த பெண்ணின் பெயர் அல்லது வசிப்பிடம் தொடர்பில் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE