இந்தியாவுடன் ஒரு பில்லியன் டொலர் கடன் ஒப்பந்தம்

இந்தியாவுடன் ஒரு பில்லியன் டொலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட நிதி அமைச்சு தயாராகி வருகிறது.

இந்திய அரசின் தலையீட்டுடன் இந்தியன் வங்கியுடன் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல இன்று ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வசதியாக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் நாளை இந்தியாவுக்கு செல்லவுள்ளதாகவும் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE