உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்களை நடத்த திட்டம்

உக்ரைனை ஊக்கப்படுத்தும் முயற்சியாக ரஷ்யா தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி தமக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் டான்பாஸ்க் பகுதியில் ஏராளமான ரஷ்ய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 63 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த ஆண்டின் கடைசி சில நாட்களில் உக்ரைன் வான் பாதுகாப்புப் படைகள் 80க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE