21 தமிழக மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்களினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 31ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்புக்குள் 2 படகுகளில் அத்துமீறி நுழைந்த 21 தமிழக மீனவர்களை வடமராட்சி மீனவர்கள் சுற்றி வளைத்து தடுத்து வைத்திருந்தனர்.

வடமராட்சி மீனவர்களிடமிருந்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பொறுப்பெடுத்து, குறித்த மீனவர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் முதலாம் திகதி பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்களை இன்றைய தினம் வரையில் விளக்க மறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , குறித்த 21 மீனவர்களையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE