பெருவில் தரையில் விழுந்து நொறுங்கிய குட்டி விமானம்

பெரு நாட்டில் இலகு ரக விமானம் ஒன்று தரையில் விழுந்து நொறுங்கியதில் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். வரலாற்று சிறப்புமிக்க பழம்பெரும் நகரமான நாஸ்காவை வான்வழியே காண விரும்பிய சுற்றுலா பயணிகள் 5 பேர் சிறிய வகை விமானத்தை வாடகைக்கு அமர்த்தினர்.

நெதர்லாந்து மற்றும் சிலி நாடுகளை சேர்ந்த 5 பேர் மற்றும் பெரு நாட்டு விமானிகள் 2 பேரை சுமந்தபடி நாஸ்கா நகரில் உள்ள மரியா ரீச் விமான நிலையத்திலிருந்து செஸ்னா 207 வகை விமானம் நேற்று புறப்பட்டது. ஆனால் சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் மோதி தீப்பிடித்து எரிந்தது.

இதில் விமானத்தில் பயணித்த அனைவரும் உடல் கருகி உயிர் இழந்தனர். விபத்து பகுதிக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விமான விபத்துக்கான காரணம் குறித்து துறை ரீதியிலான விசாரணைக்கு பெரு விமான போக்குவரத்துக்கு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE